tamilnadu

img

அண்ணா பல்கலைக்கழகத்தின் அரியர் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி ரத்து ஆகிவிடும் எனும் நடைமுறை பின்பற்றப்படும் சூழலில், 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கும், தற்போது தேர்வெழுதும் வாய்ப்பளிக்கப்படுகிறது. அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.