tamilnadu

img

அண்ணா பல்கலை. ஆசிரியர்கள் போராட்டம்..

சென்னை:
அண்ணா பல்கலைக்கழகப் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், பல்கலைக்கழகத்தினைப் பிரித்து பெயரை மாற்றுவதால் உலகளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ள நற்பெயர் போய்விடும் என்றும், அரசின் முடிவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் பணியாளர்கள் அனைவரும் கறுப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது என்றும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் திங்களன்று (செப். 21) கறுப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.இது குறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சக்திநாதன் பேசும்போது,’உலகளவில் அறியப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து பெயர் மாற்றம் செய்வதால், அதற்குரிய அங்கீகாரம் பறிபோய்விடும். அனுமதி பெறுவது முதல் ஆராய்ச்சிக்கான நிதி பெறுவது வரை மீண்டும் புதிதாக செய்ய வேண்டும்.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதே பெயர் தொடர வேண்டும் என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். எனவே, அரசு இம்முடிவை கைவிடும் வரை கறுப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபடவுள்ளோம். வகுப்புகளுக்கு எந்த இடையூறுமின்றி எங்கள் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்கிறோம்.தொடர்ந்து பேசிய கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சேகர், மிகவும் பழமையான அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது எனத் தெரிவித்தார்.

;