tamilnadu

புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அண்ணா நூற்றாண்டு நூலகம் அனுமதி

சென்னை, மார்ச் 8- சென்னை கோட்டூர்புரத்தில் அமைந் துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள நூல்களை படிப்பதற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள் ளது.

அதன்படி , நூலகத்தில் உறுப்பினர் களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்ல லாம். 30 நாட்களில் திருப்பி அளிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலில் நூல்கள்  வழங்கப்பட உள்ளன.

வருகிற 11 ஆம் தேதி முதல் புத்தகங் களை உறுப்பினர்கள் எடுத்துச் செல்ல லாம். 2 முறை புதுப்பித்தல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் நூலகத்தில் உள்ள நிலையில், ஒரு லட்சத்தி ற்கும் மேலான புத்தகங்கள் வெளியே எடுத்துச் சென்று படிக்க அனுமதிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.