சென்னை, மே 7 - இளம் வயது ஆண்களை அதிகம் பாதிக்கும் வளை யாநிலை முதுகெலும்பு அழற்சி நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் எச்சரித்துள்ளார்.
வளையாநிலை முது கெலும்பு அழற்சி நோய் (மடங்காதநிலை முது கெலும்பு வீக்கம்) தினம் செவ்வாயன்று (மே 7) ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மூட்டு தசை, இணைப்புத் திசு நோய் கள் இயல் பிரிவு சார்பில் அணுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் தேரணிராஜன், “இந்நோயானது உடலின் பெரிய மூட்டுகள் மற்றும் முதுகெலும்பை பாதிக்கும் தன்மை கொண்டது. கீழ் முதுகு வலியாக தொடங்கும் இந்நோயானது, இளவயது ஆண்களை அதிகம் பாதிக் கும். ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை பெறாவிடில், கழுத்து மற்றும் முது கெலும்பு இறுகி வளையா நிலை ஏற்படும். இந்நோயின் சிகிச்சைக்கு தேவையான விலை உயர்ந்த மருந்துகள் அரசு இலவசமாக வழங்கு கிறது” என்றார்.
“உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வதால் உடல் பருமனை குறைப்ப தோடு, சக்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கொழுப்பு சத்து, இருதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். சத்தான உணவு களை உட்கொள்ள வேண்டும்” என்று துறைத் தலைவர் டாக்டர் அருள் ராஜா முருகன் குறிப்பிட் டார்.