tamilnadu

img

மனஉளைச்சல் தரும் கூடுதல் பணி: அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

கரூர், ஏப்.19-

  அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது.

  போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், அங்கன்வாடி மாவட்டச் செயலாளர் என்.சாந்தி, மாவட்டப் பொருளாளர் கே.கலா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுப்பிர மணியன், மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், மாவட்டப் பொருளாளர் பொன்.ஜெயராம் ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட னர்.