tamilnadu

வாக்களிக்க வந்த பேரா.க.அன்பழகன்

சென்னை, ஏப்.18-இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவருமான திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வியாழன் காலை தனது தள்ளாத உடல் நிலையிலும் கூட சக்கர நாற்காலியில், மூக்கில் ட்யூப் பொருத்தப்பட்டிருக்கும் நிலையிலும் வந்து தனது வாக்கினை செலுத்தியிருக்கிறார்.97 வயதாகும் பேராசிரியர் பல தேர்தல்களைப் பார்த்தவர், பல தேர்தல்களில் பங்கேற்றவர். இப்போது வயது மூப்பின் காரணமாக தேர்தல் பரப்புரைகளில் பெரிதும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். ஆனபோதும் தேர்தல் நாளன்று காலையிலேயே தனது ஜனநாயகக் கடமையை செலுத்துவதற்காக சீக்கிரமே வாக்குச் சாவடிக்கு வந்தார். தன் கையைத் தூக்க முடியாமல் வந்தவர் மின்னணு இயந்திரம் அருகே சென்றதும் கையை உதவியாளரின் உதவியோடு மெல்லத் தூக்கி தன் வாக்கை செலுத்தினார்.பேராசிரியரின் கடமை உணர்வைப் பார்த்த வாக்குச் சாவடி அலுவலர்கள், அனைத்துக் கட்சி முகவர்கள், வரிசையில் நின்ற வாக்காளர்கள் அனைவருமே நெகிழ்ந்து போய் நின்றனர்.வாக்களித்துவிட்டு வெளியே வந்த பேராசிரியர் தொண்டர்களைப் பார்த்து மெல்லக் கையசைத்தார்.

;