tamilnadu

img

ஆய்வாளர் காலிப்பணியிட பட்டியல்: நவ. 10க்குள் வழங்க டி.ஜி.பி. உத்தரவு...

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட் காலிப்பணியிட பட்டியலை, நவ., 10க்குள் வழங்க, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், சட்டசபை தேர்தல், 2021ல் நடக்க உள் ளது. இத்தேர்தலை முன் னிட்டு, ஒரே இடத்தில், மூன்று ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த எஸ்.பி., அந்தஸ்திலான அதிகாரிகள், டி.எஸ்.பி.,க்களின் முதல் கட்ட இடமாற்றம் முடிந்தது. தொடர்ந்து, கடந்த மே மாதம் தொடங்கி, செப் டம்பர் வரை, எஸ்.ஐ.,க்கள், ஆய்வாளர்களை, மண்டல ஐ.ஜி.,க்கள் இடமாற்றம் செய்தனர்.அதில், அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் சிபாரிசுடன், தங்களின் விருப்ப பணியிடங்களை பெற்றனர்.இந்நிலையில், மண்டல ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., திரிபாதி அனுப்பிய உத்தரவில், போலீசில், மண்டலங்கள் இடையே பணிபுரியும் போலீசார், அதற்கு மேலான பதவிகளை வகிப்பவர்களை, டிசம்பர் முதல் வாரத்துக்குள் இடமாற்ற வேண்டும். அதனால், அனைத்து மண்டல ஐ.ஜி.,க்கள், மண்டலங்களுக்கு இடையிலான பணியிட மாற்றத்தை, நவ., 6க்குள் நடத்த வேண்டும். பின், மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிட பட்டியலை, எஸ்.பி.,க்களிடம் ஆலோசித்து, நவ., 10க்குள் டி.ஜி.பி., அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.