சென்னை, செப். 30 - குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் கார ணமாக அக்டோபர் 1 முதல் 5 நாட் களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங் களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் தேனி, திண்டுக் கல், திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கடலூர், தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாத புரம் மாவட்டங்களில் மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதி களில் இடி, மின்னலுடன் கூடிய லேசா னது மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானி லை ஆய்வு மையம் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.