tamilnadu

img

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கை

சென்னை:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள தால் கலை பாடப்பிரிவுக ளுக்கு கூடுதலாக 20 சதவீதமும், அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 20 சதவீதமும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கல்லூரி கல்வி இயக்குநர் இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை வைத்ததாகவும், அதையேற்று 2020-21ஆம் கல்வியாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் சேர்க்கைக்கு சம்மந்தப்பட்ட பல் கலைக்கழகங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

;