சென்னை, செப்.2- மோட்டார் வாகனத் தொழிலையே ஒழித்துக் கட்டும் வகையில் மத்திய பாஜக அரசு மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றியது.இந்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங் கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் இந்தப் புதிய சட்ட திருத்தம் திங்கள்கிழமை (செப்.1) நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அமைந்திருக்கும் இந்தச் சட்டத்தால் சாதாரண தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கானோர் வாழ்விழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, ஓட்டுநர் உரிமம் இன்றி வண்டியை ஓட்டி செல்வது, குடி போதையில் வாக னத்தை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு குற்றத்துக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம் அமலாக்கப்படுவது குறித்து எந்த அறி விப்பும் தமிழக போக்குவரத்து துறையின ருக்கு அளிக்கப்படாததால் இங்கு புதிய சட்டத்தை அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் செவ் வாய்கிழமை (செப். 03) முதல் அமல்படுத் தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.