tamilnadu

img

அம்பத்தூரில் பள்ளி மாணவர்களின் சுகாதாரக் கண்காட்சி

அம்பத்தூர், நவ. 23- சேதுபாஸ்கரா மெட்ரிக்குலேஷன் பள்ளி, ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி, பிரிட்டானியா உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 12 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ‘சுத்தம் சுகாதாரம்’ குறித்த விழிப்புணர்வு கண்காட்சி யும், செயல்முறை விளக்கமும் அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்றது. கண்காட்சியை திரு வள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆர்.திருவளர் செல்வி, ஆர்.அண்ணாதுரை ஆகி யோர் துவக்கி வைத்தனர். இதில் வாய் சுகாதாரம், சுவாச சுகாதாரம், சுகாதாரமண உணவு, சுத்தமான குடிநீர் சுகாதாரம், சாலையை தூய்மையாக வைத்திருப்பது, தனி மனித சுகாதாரம், நிலம் நீர் காற்று மாசுபடுதல், உணவு கலப்படம், சுகாதாரத்தில் விஞ்ஞானிகள் பங்களிப்பு, கை, கால்களை சுத்தமாக வைத்திருத்தல், பிளாஸ்டிக்கினால் உண்டாகும் ஆபத்து, கிருமிகள் தாக்குதல், கரப்பான் பூச்சி, எலி, கொசு ஒழிப்பு முறை குறித்து மாணவர்கள் விளக்கமளித்தனர். மருத்துவர் வரதராஜன், சேதுபாஸ்காரா பள்ளி முதல்வர் எஸ்.பி.பி.செல்வகுமார், சர்  ராமசாமி பள்ளி முதல்வர் ஆமோஸ், காம ராஜர் மகளிர் பள்ளி முதல்வர் வனிதாராணி உள்ளிட்ட ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியை லிட்டில் டிராப்ஸ் சுகாதார அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.