tamilnadu

img

எல்ஐசியில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் பாஜகவை மக்களை திரட்டி முறியடிப்போம் சென்னை கருத்தரங்கில் க. சுவாமிநாதன் பேச்சு

சென்னை, டிச. 6-
எல்ஐசியில் 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனு மதிக்கும் பாஜகவின் தவறான கொள்கைகளை மக்களை திரட்டி முறியடிப்போம் என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கே.சுவாமிநாதன் தெரிவித்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை யில் வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதையொட்டி வேப்பேரியில் “பொதுத்துறைகள் பாது காப்பு” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் தென்னிந்திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன் “தேச வளர்ச்சியில் எல்ஐசி மற்றும் ஜிஐசி” என்ற தலைப்பில் பேசுகையில், வலிமையான எல்ஐசி இருந்தால், வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கு பயன்படும். ஆயுள் காப்பீட்டு கழகத்தின் மீதான தாக்குதல்கள் எல்லாமே தற்போது ஆட்சியில் இருக்கக் கூடிய பாஜக ஆட்சியில்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1994இல் மல்ஹோத்ரா குழுவின் அறிக்கை வெளிவந்தது. ஆனால் 1999வரை அந்த அறிக்கை மீது அப்போதைய ஆட்சியாளர்கள் அதை அமல்படுத்தவில்லை. ஏனென்றால் மக்களின் கருத்தை குறைந்தபட்சம் காது கொடுத்து கேட்கும் ஜனநாயக பண்பு இருந்தது. 1999இல்தான் முதன்முதலில் இன்சூரன்ஸ் துறை அந்நிய முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டது. அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய் இன்சூரன்ஸ் துறையில் 49 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிக்கப் போவதாக அறிவித்தார். உடனே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் சோனியா காந்தியை சந்தித்தனர். அப்போது அவர் ஏன் இதை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறீர்கள் என்று கேட்டார். இன்சூரன்ஸ் 49 விழுக்காடு அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டால், வரக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களின் கரங்களில் இன்சூரன்ஸ் துறை போய்விடும் என்று கூறினோம். ஒன்றிய பாஜக அரசு 49 விழுக்காடு அந்நிய மூல தனத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாலும் கூட, அவர்களுக்கு மாநி லங்களவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், அந்த மசோதா நிறைவேறும் போது, 26 சதவிகிதம்தான் என்று அவர்களால் அறிவிக்க முடிந்தது. 2006ஆம் ஆண்டு ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அந்நிய முதலீட்டை மீண்டும் 49 சதவிகிதமாக உயர்த்தலாமா, எல்ஐசியின் பங்கு விற்பனையை செய்யலாமா   என்ற 2 மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து அந்நிய முதலீட்டு மசோதா கைவிடப்பட்டது.

 எல்ஐசி பங்கு விற்பனை இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டு, மூலதனம் மட்டும் 5 கோடியில் இருந்து 100 கோடி யாக உயர்த்தப்பட்டது. நவீன தாராளமய பாதையில் மக்கள் கருத்திற்கு இடமே இல்லை என்று சொல்லக் கூடிய ஆட்சியாளர்களை நாம் தற்போது எதிர்நோக்கிக் கொண்டிருக்கி றோம். பொதுவுடைமை சிந்தனை யாளர்கள் மட்டுமல்லாமல், காந்திய சிந்தனை யாளர்கள் உள்ளிட்ட நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் ஒரே மேடையில் இருந்து மூர்க்கத்தனமான உலகமயமாக்கலை எதிர்த்து போராட வேண்டிய தேவை உள்ளது. 

ஆனால் ஒன்றிய அரசு தற்போது 100 விழுக்காடு அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று அறி வித்திருக்கிறது. அப்படி என்றால் முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் காப்பீட்டு கழகம் போய்விடும். பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கபட வேண்டும் என்றால், நாம் அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து போராடுவ தோடு, அதை மக்களிடம் கொண்டு சென்று, இந்த அபாயகரமான முடிவை முடியடிப்போம்.

இவ்வாறு க.சுவாமிநாதன் கூறினார்.