சென்னை:
மருத்துவப் படிப்பில்அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பான மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார்.
இணைந்து போராட தயார்
மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை ஆளுநர் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவருக்கு கடிதம் எழுதி உள்ளேன். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற் றும் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும். ஆளுநர் இதில் மேலும் பாராமுகமும், தாமதமும் காட்டுவது நல்லதல்ல. இந்த நேர்வில், மாநில உரிமைகளுக்காக அதிமுக அரசுடன் இணைந்து போராட, திமுக தயாராக இருக்கிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!” என்று அதில் தெரிவித்துள்ளார்.
அரசாணை மூலமே வழங்குக: திருமாவளவன்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங் கும் விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்-“ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததால் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய் வைத் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. அதை எதிர் பார்த்துக் கொண்டிருக்காமல் அரசாணை மூலமே அந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
புதிதாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என் றால்தான் அதற்கு சட்டம் இயற்ற வேண்டிய தேவை உள்ளது. ஏற்கனவே இருக் கும் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அதுமட்டுமின்றி அதற்காக சட்டம் எதுவும் இயற்ற வேண்டிய தேவை இல்லை. அரசாணை மூலமே அதை நிறைவேற்றலாம் என்றும் கடந்த காலங்களில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தபோது நடைமுறைப்படுத்தப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி உள்ளார்.