தொழில்நுட்ப வளர்ச்சியை சமூகத்தின் பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதே அரசின் நோக்கம். உள்ளாட்சி அமைப்புகளில் இதுபோன்ற சேவை வழங்கப்படுவது நாட்டிலேயே இதுவே முதல்முறை. மேம்பட்ட தொழில்நுட்பத் துறையில் எப்போதும் முன்னோடியாக இருக்கும் மாநிலம் கேரளம்.
தொழில்நுட்ப வளர்ச்சியை சமூகத்தின் பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதே அரசின் நோக்கம். கேரள கல்வித்துறை இதற்கு சிறந்த உதாரணம். 45,000 வகுப்பறைகள் ஹைடெக் ஆகிவிட்டன. இணையம் மக்களின் உரிமையாக கேரளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கே போன் மூலம் எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இணையம் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 900 சேவைகள் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளன. எம் சேவனம் (Msevanam) என்ற சிறப்பு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் மக்களுக்குப் பயன்படும் வகையில் தொழில்நுட்பத்தை அரசால் அறிமுகப்படுத்த முடிந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த வரிசையில் ‘கே ஸ்மார்ட்’ என்பது மற்றொரு பெரிய முயற்சி.
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஆன்லைன் சேவைகளை வழங்கும் கே ஸ்மார்ட் திட்டத்தை புத்தாண்டுப் பரிசாக தொடங்கி வைத்து முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரையிலிருந்து...
கே-ஸ்மார்ட் என்றால் என்ன?
கே ஸ்மார்ட் என்பது உள் ளாட்சி அமைப்புகளின் சேவை களை ஆன்லைனில் வழங்குவதற்கான ஒரு முயற்சி. கே-ஸ்மார்ட் (Kerala Solutions for Managing Administration Reformation and Transformation) அறிமுகப் படுத்தப்பட்டதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகள் விரல் நுனியில் கிடைக்கும். கே ஸ்மார்ட் ஏப்ரல் 1 முதல் பஞ்சாயத்துகளுக்கும் விரிவு படுத்தப்படும். உள்ளாட்சி சேவைகளை ஆன்லைனில் பயன்படுத்தும் முதல் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.
உள்ளா ட்சி அமைப்புகளின் அனைத்து சேவை களும் கே ஸ்மார்ட் மூலம் வெளிப்படை யாக மேற்கொள்ளப்படுகிறது, சரியான நேரத்திலும் அலுவலகங்களுக்குச் செல்லாமலும் சேவைகள் ஊழலற்றது என்பதை உறுதிப்படுத்த முடியும்.
கே-ஸ்மார்ட் ஆனது ‘உள்ளாட்சித் துறைக்கான தகவல் கேரளா’ இயக்கத் தால் உருவாக்கப்பட்டது. முதல் கட்டத்தில், பிறப்பு மற்றும் இறப்பு, திருமண பதிவு, வர்த்தகம் மற்றும் தொழில்களுக்கான உரிமங்கள், சொத்து வரி, கட்டிட அனுமதி, பயனர் மேலாண்மை, கோப்பு மேலாண்மை அமைப்பு, நிதி தொகுதி, கட்டிட அனுமதி மற்றும் மக்கள் குறை தீர்க்கும் சேவைகள் கிடைக்கும்.
கே-ஸ்மார்ட் மூலம் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் புகார்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். அவற்றின் தற்போதைய நிலையையும் அறியலாம். புலம் பெயர்ந்த சுமார் 40 லட்சம் மலை யாளிகள் உள்ளனர். அவர்கள் நேரடியாக வராமலே உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகளைப் பெறமுடியும். திருமணப் பதிவுக்குத் தேவையான ஆவணங்களை உலகில் எங்கிருந்தும் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தின் உதவி யுடன், கட்டிட அனுமதிகள் சில நொடிகளில் மக்களுக்கு கிடைக்கும்.