tamilnadu

img

உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு குறித்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க, வரும் நவம்பர் 12-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அரசியல் சாசனத்தின் 103-வது திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. நேற்று, இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. அதில்  பெரும்பான்மையின் அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பாக உள்ளது. இந்த நிலையில், தொடர்பாக ஆலோசிக்க வரும் நவம்பர் 12-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், 10% இட ஒதுக்கீடு குறித்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க, வரும் நவம்பர் 12-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.