tamilnadu

போக்சோ சட்ட விதிமுறைகளை மீறிய காவல்துறை

சென்னை, நவ.24- உதகமண்டலத்தில் போக்சோ  சட்ட விதிமுறைகளை மீறிய காவல் துறையினரின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  காவல்துறை தலைமை இயக்கு நருக்கு  மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத் மாநிலத் தலைவர்  எஸ்.வாலண்டினா  மாநில பொதுச் செயலாளர்  ஏ.ராதிகா ஆகியோர் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு

நீலகிரி மாவட்டம், உதகமண்ட லத்தில் போக்சோ  வழக்கில் பாதி க்கப்பட்ட சிறுமியை நீதிபதியிடம் வாக்குமூலம் அளிக்க அழைத்துச் சென்றபோது, காவல்துறையினர் கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் கடுமையான கண்டனத்திற்குரியது.

 காவல்துறையின் இந்த நட வடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்படுகிற சிறுமிகளிடம் விசாரணை மேற் கொள்ளும் போது, கண்ணிய மான முறையில், சிறுமி அ
ச்சமடை யாத வகையில்,  குழந்தைக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று போக்சோ சட்டத்தில் பல்வேறு சிறப்பு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவற்றையெல் லாம் தூக்கி எறிந்து விட்டு பாதிக்கப்பட்ட சிறுமியை கை  விலங்கிட்டு அழைத்து சென்ற தோடு மட்டுமல்லாமல், அதை  வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி வெற்று காகிதங் களில் கையெழுத்து பெற்றிருப் பதாகவும் பத்திரிகைகளில் செய்தி  வெளியாகி இருக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பான காவல் துறையின் செயல்பாடாகும்.

பல்வேறு வகைகளில் பாலி யல் துன்புறுத்தல்களில் பாதிக் கப்பட்ட குழந்தைகளுக்கு காவல் துறையின் இத்தகைய செயல்பாடு கள் குற்றத்தை வெளியில் சொல் லாமல் தடுப்பதற்கு  உதவி செய்வ தாக அமையும். உடனடியாக சம்ப ந்தப்பட்ட காவல் துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வழக்கில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்த குற்ற வாளி இன்னும் கைது செய்யப் படாமல் இருப்பது பெரும் சந்தே கத்தை எழுப்புகிறது. குற்ற வாளியை காப்பாற்றும் நடவடிக் கைகளில் காவல்துறை தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. உடனடி யாக குற்றவாளி கைது செய்யப் பட வேண்டும் என்பதை வலி யுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டுப் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் இழைக் கப்படும் போது, காவல்துறை யின் நடவடிக்கை பாதிக்கப்பட்ட வர்களின் பக்கமே இருக்க வேண்டும். மேற்கண்ட சம்பவங் களை பார்க்கும் போது குற்ற வாளிக்கு ஆதரவாக காவல்துறை யின் செயல்பாடுகள் இருப்ப தாக தெரிகிறது. மேற்கண்ட சம்ப வத்தில் தமிழக டிஜிபி உடனடி யாக தலையீடு செய்து, தவறி ழைத்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது டன்,   குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.