ஒ.பன்னீர்செல்வம் பெயரிலான ஐந்து மனுக்களும் ஏற்பு
இராமநாதபுரம், மார்ச் 28 - இராமநாதபுரம் தொகுதியில் முன் னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாள ராக போட்டியிடு கிறார். இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே மேலும் 4 பேர் இராமநாதபுரம் தொகுதி யில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், வியாழனன்று வேட்புமனு பரி சீலனை நடைபெற்ற நிலையில், ஓ. பன் னீர்செல்வம் என்ற பெயரைக்கொண்ட வேட்பாளர்கள் 4 பேரின் மனுக்களை யும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால், வாக்குப் பதிவு இயந்திரத்தில் வரிசையாக ஓ. பன்னீர்செல்வங்கள் இடம்பெற உள்ளனர்.
‘கை’ சின்னத்திற்கு ஓட்டு கேட்ட வாசன்
ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 28- ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமாகா வேட்பாளர் வேணு கோபாலை ஆத ரித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், மாங்காட் டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ஜி.கே. வாசன், சைக்கிள் சின் னத்துக்கு பதில் ‘கை’ சின்னத்துக்கு ஓட்டு கேட்டு மாட்டிக் கொண்டார். இத னால் தமாகாவினர் அதிர்ச்சியடைந்த நிலையில், ‘அருகிலிருந்தவரிடம் கையை நகர்த்தி கொள்ளுங்கள்’ என்றே கூறி னேன் என்று சமாளித்துள்ளார். இந்த சம்பவம் இணையதளங்களில் கிண்ட லுக்கு உள்ளாகியிருக்கிறது.
‘ரத்தம் கக்கிச் சாவீர்கள்...’ பயமுறுத்திய செல்லூர் ராஜூ
மதுரை, மார்ச் 28 - மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ஆதரவுக் கட்சியான அதி முக போட்டியிடுகிறது. வேட்பாளராகச் சரவணன் நிறுத்தப்பட்டுள்ளார். சர வணனை அறிமுகப்படுத்தும் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “ரொம்ப நேரம் உட்கார்ந்தி ருப்பவர்களில் எழுந்து போக நினைப்ப வர்கள், இப்போதே எழுந்து சென்றுவிட லாம். வெளியில் கூட்டம் நிரம்பி வழி கிறது. நான் பேசும்போது யாராவது பாதி யில் எழுந்து போனால் ரத்தம் கக்கிச் சாவீங்க” என அதிமுக தொண்டர்களைப் பயமுறுத்தினார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 - தேர்வு தேதி அறிவிப்பு
சென்னை, மார்ச் 28- துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பா ளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஊழி யர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதன்படி 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு தேதியை, தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)வெளியிட் டுள்ளது. மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <http://www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
டி.டி.வி. தினகரன் மீது வழக்கு
தேனி, மார்ச் 28- அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேட்புமனு தாக்கலின்போது 70 கார்கள், 3 ஆட்டோக்கள், 3 மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக புறப்பட்டு தேனி ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது 100 மீட்டர் எல்லைக் கோட்டில் காவல்துறையினர் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை தாண்டி அமமுகவினர் அடாவடியில் ஈடுபட்டனர். விதிமுறைப்படி வேட்பு மனு தாக்கல் செய்ய 3 வாகனங்களு டன் 5 நபர்கள் செல்ல அறிவுறுத்தியும் கேட்காமல் உள்ளே செல்ல முயன்றனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் டி.டி.வி. தினகரன், அக்கட்சியின் நிர்வாகி ராம்பிரசாத் மற்றும் பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.