tamilnadu

img

தமிழகத்தில் 25 இடங்களில் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பு....

சென்னை:
ரூ.45 கோடியில் 25 இடங்களில் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதிறந்து வைத்தார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் உள்ள 28 இடங்களில் தேசிய காற்று மண்டலக் கண்காணிப்பு திட்டத் தின் கீழ், வாரத்தில் இரண்டு நாட்கள் காற்று மாதிரி சேகரிப்பு செய்து காற்றின் தரத்தினைக் கண்காணித்து வருகின்றது.இது தவிர சுற்றுப்புறக் காற்றின் தன்மையைத் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 5 இடங்களிலும், கும்மிடிப்பூண்டி, கோயம்புத்தூர், பெருந் துறை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலா ஒரு தொடர் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களும் இயங்கி வருகின்றன.

இதில் பதிவாகும் புள்ளிவிவரங்களைக் கொண்டு காற்றின் தரக் குறியீடு கணக்கிடப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.இத்திட்டத்தினை மாநிலம் முழுவதும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சேலம், கடலூர், நாகப் பட்டினம், அரியலூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 25 இடங்களில் 45 கோடி ரூபாய் மதிப் பீட்டில் நிறுவப்பட்டுள்ள சுற்றுப்புற காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங் களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.இந்நிலையங்களிலிருந்து பெறப் படும் புள்ளி விவரங்கள் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அந்தந்த மாவட் டங்களின் அருகிலுள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங் களை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, காற்றுத் தரக் குறியீட்டினை எட்டாத நகரங்களுக்கு காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கவும், திட்ட அறிக்கை தயாரித்துச் செயல்படுத்தவும், புதிய தொழிற் சாலைகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்வதற்கும் இப்புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும்.மேற்படி 25 தொடர் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் செயல் படத் தொடங்கியதன் மூலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தொடர் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையம் கொண்ட வாரியமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திகழ்ந்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஏ.வி. வெங்கடாசலம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.