tamilnadu

அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசத் தடை

 சென்னை,ஜூன் 12 அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் எந்த ஊடங்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமைக் கழகம் தெரி வித்துள்ளது. மேலும், கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிக்க செய்தித் தொடர்பாளர்களுக்கு உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா கூறியதால் எழுந்த சர்ச்சை குறித்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாதிக்கப்பட்டது. அப்போது அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.இதனால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் தனிப்பட்ட முறையிலும் கருத்து தெரிவிக்க தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.