tamilnadu

img

விவசாய சங்கத் தலைவர் தோழர் நாகேஷ் காலமானார்

மதுராந்தகம், ஜன. 3- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் பொருளாளர் நாகேஷ் (52) வியாழனன்று (ஜன. 2) இரவு உடல் நலக் குறைவால் காலமானார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு  உறுப்பினராகவும், ஈசூர் கிளையின் செயலாளராகவும் இருந்துள்ளார். தனது இறுதிமூச்சு வரை மக்களுக்காக பணியாற்றியவர். பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என பாலாற்றில் குடியேறும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.  அவரது உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், செயலாளர் கே.நேரு, பொருளாளர் சாரங்கன், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பாஸ்கரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்ணராஜ், பி.மாசிலாமணி, எஸ்.ராஜா, லாரன்ஸ், ரவி, மதுராந்தகம் வட்டச் செயலாளா் கே.வாசுதேவன்,  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மபா.நந்தன், செயலாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்ட ஏராளமான நண்பர்களும், உறவினர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

;