எல்ஐசி பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடும் மசோதாவை கைவிட வேண்டும், நேரடி அன்னிய முதலீட்டு அளவை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.9) முகவர்கள் (லிகாய்) சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லிகாய் கிளை-6 சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள சென்னை வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் சங்க துணைத்தலைவர் க.சுவாமிநாதன், கிளை நிர்வாகிகள் எஸ்.நடராஜன், டி.அன்பழகன், ஜி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.