tamilnadu

img

செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு பூமிக்கு திரும்பும் ராக்கெட்

சென்னை,ஆக,20-  செயற்கைகோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் புது வகை ராக்கெட்டை ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ நிறுவனம் உருவாக்கி யுள்ளது. இந்த ராக்கெட் 3 சிறிய செயற்கைக்கோள்களுடன் வருகிற 24-ம் தேதி சென்னை அருகே விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக் கத்தில் இயங்கி வரும் ‘ஸ்பேஸ் ஸோன்  இந்தியா’ நிறுவனம் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதுடன் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களை வடி வமைத்து அவற்றை விண்ணில் செலுத்தும் பணியிலும் ஈடுபட்டு வரு கிறது. இந்நிலையில், இந்நிறுவனம் செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ‘ரூமி’என்ற மினி ராக்கெட்டை வடி வமைத்துள்ளது.

இதன் எடை சுமார் 80 கிலோவாகும். காலநிலை, காஸ்மிக் கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு , காற்றின் தன்மை தொடர்பான தரவுகளை சேகரிக்க உதவும் 3 கியூப் செயற்கைக்கோள்கள் மற்றும் 50 விதமான ஆய்வு சாதனங் களுடன் ‘ரூமி’ ராக்கெட் வருகிற 24-ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் 7.45 மணிக்குள் சென்னை கேளம் பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மூன்று செயற்கைகோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் நிலைநிறுத்திவிட்டு அதில் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்துவிடும்.

இந்த புதிய ராக்கெட் திட்டம் தொடர்பான அறிவிப்பை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’நிறுவனத்தின் நிறுவனர் மற்றும், தலைமைச் செயல் அலுவலர் ஆனந்த் மேகலிங்கம், மார்ட்டின் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோர் வெளியிட்டனர். ஆனந்த் மேகலிங்கம் கூறுகையில், “மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக் கெட்டை கொண்டு செயற்கைக் கோள்களை ஏவுவதால் செலவு மிச்ச மாகும். நாங்கள் ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.