சென்னை, ஜூன் 4-சென்னை மாநகாரட்சி மண்டலம் 8க்குட்பட்ட வில்லிவாக்கம் அன்னை சத்யாநகர் பகுதியில் சுமார் 200க்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தினசரி தண்ணீர் விநியோகம் செய்யாமல் 2 நாட்களுக்கு ஒரு முறை என விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதானல் அந்த பகுதி மக்கள் போதுமான குடிநீர்மற்றும் இதர வீட்டு உபயோகத்திற்கான தண்ணீரும் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர். பலமுறை இதுகுறித்து குடிநீர் வாரியத்தில் புகார் அளித்தும்அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குடிநீர் பிரச்சனை குறித்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பின்னர்அந்த பகுதி மக்களை திரட்டிகுடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய மனுக்களை உதவி செயற்பொறியாளரிடம் அளித்து வாலிபர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பகுதிச் செயலாளர் யூஜின், சத்யா நகர் கிளை நிர்வாகிகள் டோனி, ஸ்ரீராம், கலாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தினசரி தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும், தொட்டியில் இல்லாமல் லாரி மூலம் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் தினசரிலாரி மூலம் இரண்டு முறைதண்ணீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்தனர். மேலும் உடனடியாக லாரிமூலம் தண்ணீர் விநியோகமும் செய்யப்பட்டது.