tamilnadu

img

அ.தி.மு.க.,விலிருந்து தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ விலகல்

சென்னை:

அதிமுக கட்சியின் முன்னணி உறுப்பினரும், அம்மா பேரவை இணைச்செயலாளருமான தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் இதர பொறுப்பிலிருந்து விலகுவதாக தலைமை செயலகத்திற்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். 


தமிழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சராகவும், ஈரோடு புறநகர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மாநில அம்மா பேரவை இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 


டி.டி.வி.தினகரனுடன் இணைந்து சென்று ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற இரு தரப்பினும் முன்வரவேண்டும் என அதிமுக தலைமையை வெகு நாட்களாக வலியுறுத்தி வந்த தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து விலகியுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

;