tamilnadu

img

சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை:

நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக செவ்வாயன்று அறிவித்தது.

மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 அன்று தொடங்கியது. திமுக மற்றும் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதிமுக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கோஷ்டி பூசலால் இழுபறி ஏற்பட்டது. 

நீண்ட இழுபறிக்குப் பின்னர் செவ்வாயன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், சூலூர் தொகுதியில் கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவைத் தலைவர் வி.பி.கந்தசாமி, அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட அதிமுக இளைஞர்- இளம்பெண்கள் பாசறைச் செயலாளரான வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அவனியாபுரம் பகுதிக் கழகச் செயலாளர் முனியாண்டி, ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு தூத்துக்குடி மாவட்ட அதிமுக துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான மோகன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

;