சென்னை, மார்ச் 3- சென்னை விமான நிலை யத்திலிருந்து முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கூடுதல் நேரடி விமான சேவை ஞாயிறன்று (மார்ச் 3) தொடங்கப்பட்டது. இதன்மூலம் குவைத் நாட்டுக்கு நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் செவ்வாய், சனிக்கிழமை தவிர, வாரத்தில் 5 நாட்க ளுக்கு மாலை 6.50 மணி யளவில் சென்னை சர்வதேச விமான முனையத்தில் இருந்து புறப்படுகிறது. அன்று நள்ளிரவு குவைத் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து மறுநாள் அதிகாலை புறப்பட்டு, காலை 6.35 மணியளவில் சென்னை விமான நிலை யத்தை வந்தடைகிறது.
தற்போது இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகிறது. இந்த கூடுதல் நேரடி விமான சேவைக்கு பயணிகளிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, விரைவில் தின சரி நேரடி விமான சேவை இயக்கப்பட இருப்பதாக ஏர்லைன்ஸ் வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது.