tamilnadu

img

சூதாட்டம் நடத்தியதாக நடிகர் ஷாம்  உள்ளிட்ட 14 பேர் கைது

சென்னை:
அடுக்குமாடிக் குடியிருப்பில் சூதாட்டவிடுதி நடத்தியதாக நடிகர் ஷாம் உள்ளிட்ட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு, எழுதி வாங்கி வழக்கு எதுவும் போடாமல் ஜாமீனில் விடுவித்தனர்.நுங்கம்பாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட லயோலா கல்லூரி எதிரே உள்ளஅடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் தளத்தில் நடிகர் ஷாம்  சூதாட்ட விடுதியைசட்டவிரோதமாக நடத்தி வருவதாக காவல்துறைக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து திங்கள் இரவு 8 மணி அளவில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்து வேல்பாண்டி தலைமையில் நுங்கம்பாக்கம் காவலர்கள் அந்த சூதாட்ட விடுதிக்குச் சென்றுஆய்வு நடத்தினர்.

அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த நடிகர் ஷாம் உட்பட 14 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது சூதாட்ட வழக்கு 45, 46 கிரைம் நம்பர் பதிவு செய்துவழக்கு எதுவும் பதிவு செய்யாமல், எழுதி வாங்கிக்கொண்டு நிலைய ஜாமீனில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

;