tamilnadu

img

ஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை தமிழக அரசு கோரிக்கை

சென்னை:
ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு  மத்திய அரசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை  (ஜூலை 11) எழுதியுள்ள கடிதம் வருமாறு:

“ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க கோரி 19.05.2020 அன்று எழுதிய கடிதத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அதன்படி இந்திய கடற்படையின் ஜலஷ்வா  கப்பல் மூலம் தமிழக மீனவர்கள் 681 பேர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் இன்னும் தமிழக மீனவர்கள் 40 பேர், ஈரானிலேயே தவித்து வருகின்றனர். எனவே, அந்த மீனவர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை வேண்டும் என உங்களை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு  அக்கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

;