tamilnadu

img

ஆளுநர் ரவிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

சென்னை, பிப். 13 - தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகரால் நீக்கி உத்தரவிடப்பட்ட கருத்துக்களை ஆளு நர் ஆர்.என். ரவி, வீடியோவாக வெளி யிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் இந்த அடாவடியை அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாகக் கண்டித்திருந்தன.

இந்நிலையில், ஆளுநர் ரவியின் செயல் தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் உரிமை மீறல் பிரச்சனை எழுப்பப்பட்டு, நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. 

2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 12 அன்று துவங்கும் என்றும் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

தேசிய கீதத்தை வைத்து ஆளுநர் ரவி சர்ச்சை
அதன்படி, பிப்.12 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூடி யது. வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும், தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பேரவை தொடங்கும் முன்பும் முடியும் போதுமாக, இரண்டுமுறை தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரி யாதை தரப்படவில்லை என்று உப்புச் சப்பில்லாத ஒரு காரணத்தை கூறினார்.

அவையை அவமதித்து பேரவையிலிருந்து ஓட்டம்
மேலும், தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசிக்க மறுத்து, இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். இதை யடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்க த்தை பேரவைத் தலைவர் மு. அப்பாவு வாசித்தார். அந்த உரை முடிந்ததும் பேரவைத் தலைவர், சில கருத்துக் களை தெரிவித்தார். அதைத்தொட ர்ந்து, அவையிலிருந்து ஆளுநர் வெளி யேறினார்.

செல்வப்பெருந்தகை  உரிமை மீறல் நோட்டீஸ்
இந்நிலையில் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (பிப்.13) கேள்வி நேரத்திற்கு பிறகு, ஆளுநர் ஆர்.என். ரவி மீது, அவை உரிமை மீறல் தீர்மா னம் கொண்டு வர அனுமதி கோரி காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அளித்தார்.

“விதி எண். 220ன் படி பிப்.12 அன்று  சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் சில கருத்துக்களை பேரவைத் தலைவர் நீக்கி உத்தரவிட்டார். நீக்கப் பட்ட அந்த பகுதிகளை உள்நோக்கத் தோடு சமூக ஊடகமான ‘எக்ஸ்’ தளத்தில் ஆளுநர் வெளியிட்டது, அவையின் உரிமையை மீறிய செயல் ஆகும். எனவே அதுகுறித்து பேரவை யில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும்”  என்று கடிதத்தில் அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலை வர் மு. அப்பாவு, தங்களது கடிதம் தனது பரிசீலனையில் இருப்பதாக கூறினார்.

வீடியோ வெளியிடுவதையே வேலையாக வைத்திருக்கும் ரவி
கடந்த 2023 ஜனவரி 9 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அப் போது, சட்டப்பேரவையின் மாடத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் இருக்கை யில் இருந்த ஆளுநரின் விருந்தினர் ஒரு வர் அவை நடவடிக்கைகளை செல் போன் மூலம் வீடியோ பதிவுசெய்தார். 

இதுதொடர்பாக திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா அன்றைக்கு  உரிமை மீறல் பிரச்சனை எழுப்பினார். இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, இந்த பிரச்சனையில் உரி மை மீறல் இருப்பதாக கருதுவதால் இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக் கும் வகையில், பிரச்சனையை அவை யின் உரிமைக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் பேரவைத் துணைத்தலைவர் பிச்சாண்டி தலை மையிலான உரிமைக்குழு அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்ட மன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதய ராஜ், ஈஸ்வரப்பன், இ. கருணாநிதி, சிவக்குமார் உள்ளிட்ட 16 உறுப்பினர் கள் கொண்ட குழு விசாரணை மேற் கொண்டது. இந்த விவகாரம் தற்போது வரை நிலுவையில் உள்ளது.

தற்போது 2-ஆவது முறை 
இந்நிலையில், 2024 பிப்ரவரி 12 அன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் ரவி மீது காங்கிரஸ் சட்ட மன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந் தகை புதிதாக ஒரு உரிமைமீறல் பிரச்சனையை எழுப்பியுள்ளார்.