சென்னை, ஜன.9- போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்று வேலைநிறுத்தத்தை உடனே முடி வுக்கு கொண்டு வர வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி யுள்ளன. 100 மாதமாக ஓய்வூதியர் களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று நள்ளிரவு முதல் போக் குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
வேலைநிறுத்தம் காரணமாக மாநி லம் முழுவதும் 70 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் ஓட வில்லை. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், வேலைநிறுத் தத்தில் இறங்கியுள்ள போக்கு வரத்து ஊழியர்களுக்கு அனைத்து துறை ஓய்வூதியர்கள், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்பட தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித் துள்ளன. போக்குவரத்து தொழி லாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்று, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இக் கோரிக்கையை வலியுறுத்தியும், வெளிமுகமை மற்றும் தற்காலிக நபர்களை வைத்து பேருந்துகளை இயக்கக் கூடாது என வலியுறுத்தி யும் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மறியல், முற்றுகை
இந்த நிலையில் சிஐடியு மாநி லத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலைநிறுத்தம் ஒருநாளை கடந்து விட்டது. அமைச்சரிடம் இறுதியாக பேசியபோது வேலை நிறுத்தத்தை தவிர்க்க, தொழிலா ளர்களுக்கு தராமல் நிறுத்தி வைத்துள்ள, 8 வருட அகவிலைப் படி உயர்வை இந்த மாதத்தில் இருந்து அமல்படுத்துங்கள். 8 வருட நிலுவை குறித்து பிறகு பேச லாம். பணியில் உள்ள தொழிலா ளர்களுக்கு 4 மாதமாக வழங்கா மல் உள்ள அகவிலைப்படியை கொடுங்கள் என்று கோரிக்கை யை எளிமைப்படுத்தி, அரசு முடி வெடுக்கத்தக்க வகையில் கூறி னோம்.
இதற்குப் பிறகும் அரசு ஏற்க மறுத்திருப்பது வருத்தத்தை அளித்தது. அமைச்சர் அளிக்கும் பேட்டி கள் உண்மைக்கு மாறானவை. 30-40 விழுக்காடு பேருந்துகளை வெளிமுகமை, தற்காலிக பணி யாளர்கள், ஐஆர்டி ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், ஆர்டிஓ அலுவல கம் மூலமாக ஓட்டுநர்களை கட்டா யப்படுத்தி இயக்குகின்றனர். வேலை நிறுத்தம் தொடங்கிய ஒரேநாளில் ஏராளமான விபத்துக் கள் நிகழ்ந்துள்ளன. நல்வாய்ப் பாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும்.
எனவே, அரசு இப்பிரச்சனையை தீர்க்க முன்வர வேண்டும். அமைச்சர் 4 கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டதாக கூறுவது உண்மையல்ல. ஆண்டுக்கணக் கில் வரவுக்கும் செலவுக்கும் வித்தி யாசமான தொகையை வழங்கு வது, காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வரு வதாக இப்போதும் சொல்கிறார்.
மேலும் அரசியல் காரணங்களுக் காக போராட்டம் நடத்துவதாக குற் றம்சாட்டுவதில் எந்தவித நியாய மும் இல்லை. சிஐடியு, தொமுச உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்கள் கடந்த ஆட்சியில் எந்த கோரிக்கைகளுக்காக போராடினோமோ அதே கோரிக்கைகளைத்தான் இப்போ தும் வைத்துள்ளோம்.
அதை அமைச்சர் மறைத்து பேசுவது அழ கல்ல. அதே கோரிக்கைகளை இப் போது கேட்கும்போது பெரிய குற்றம் செய்ததைப் போல, அர சியல் சாயம் பூசுவது உண்மையை பார்க்க மறுப்பதாகும். 8 ஆண்டுகளாக காத்துக்கிடக் கும் ஏழைத் தொழிலாளியின் வறு மையைப் போக்குங்கள், அவர்களி டம் இருந்து எடுத்து பயன்படுத்திய பணத்தை, அவர்களுக்கு உரி யதை கொடுக்காமல் நிறுத்தி வைத் துக்கொண்டுள்ளதை தர தவணை கேட்பது ஏற்கத்தக்கதல்ல. மாதம் 72 கோடி ரூபாய் பிடிக்கக் கூடிய இந்த கோரிக்கைகளை எந்த சிரமும் இல்லாமல் போக்குவரத் துக் கழக நிதியிலேயே தர முடியும்.
இதற்கு நிதித்துறை அனுமதி தர வேண்டும் என்று பொருத்தமற்ற சமாதானம் கூறுவதுதான் வேலை நிறுத்தத்திற்கு காரணம். அரசு உடனே கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். புதனன்று (ஜன.10) மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்கள் முன்பு சட்ட விரோதமாக இயக்கப் படும் பேருந்துகளை மறிக்கும் போராட்டம் நடைபெறும். சென் னையில் மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு ஆதரவு
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் தமிழ் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலா ளர் கே.ராகவேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், “அரசு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்ட வற்றையோ அல்லது நீதி மன்றத் தீர்ப்புகளையோ அமலாக்க முன் வராத சூழ்நிலையில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, மாவட் டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெறும்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.