tamilnadu

img

ஆராய்ச்சித்துறையில் முற்றிலும் பெண்களுக்கான திட்டம் துவக்கம்....

சென்னை:
அறிவியல் தொழில் நுட்பத் துறையின் ஸ்தாபனமான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (செர்ப்), ஆராய்ச்சித் துறையில் பெண்களுக்கு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் முற்றிலும் பெண் விஞ்ஞானிகளுக்கான செர்ப்-பவர் என்னும் திட்டத்தை மத்திய  தொழில்நுட்பம் -சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், ஆராய்ச்சி வடிவமைப்புத் துறையில் இருபாலினரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிஉலகளவில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது . ஆராய்ச்சித் துறையில் பெண்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிப்பது அரசின் முக்கிய முன்னுரிமைகளுள் இது ஒன்று என்று தெரிவித்தார்.  பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித்தொகை மற்றும் மானியம் வழங்கும்இந்த செர்ப்-பவர் திட்டம், தேசிய அளவில்அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதுடன் அரசின் இந்தத் திட்டத்தால் பெண் விஞ்ஞானிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுவதுடன், தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பையும் உறுதி செய்யும் என்றுதெரிவிக்கப்படுகிறது.