tamilnadu

அவிநாசி சேவூர் ஊராட்சியில் தீண்டாமைச் சுவரை அகற்றுக!

சென்னை,பிப்.2-  அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவேந்திரர் நகரில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த. செல்லக்கண்ணு பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: திருப்பூர் மாவட்டம்,அவிநாசி ஒன்றியம்,சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவேந்திரர் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்ற னர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தேவேந்திரர் நகர் பகுதிக்கு எதிரே விஐபி நகர் என்கிற பெயரில் வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அப்போது தேவேந்திரர் நகர் பகுதியை முழுமையாக மறைத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு,5 அடி உய ரத்திற்கு தீண்டாமைச் சுவரை எழுப்பி உள்ளனர்.

அப்பகுதி மக்கள் அப்போ தே தீண்டாமைச் சுவருக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அன்றைக்கு ஊராட்சி மன்றமும்,ஊராட்சி ஒன்றிய மும் தலையிட மறுத்துவிட்டது. தற்போது அனைத்து வீட்டுமனைக ளும் விற்பனையாகி வீடுகளும் கட்டப்பட்டு விட்டன. அப்பகுதியில்தான் அரசின் இ-சேவை மையம், பொது விநி யோகக் கடை, பிரதான சாலை, தொழிற் சாலைகள் அனைத்தும் உள்ளன. பட்டியலிட மக்கள் ஒவ்வொரு நாளும் பலமுறை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தீண்டாமை சுவரைச் சுற்றிக்கொண்டுதான் இவ்விடங் களுக்கு செல்ல வேண்டியது உள்ளது.

இதனால் பட்டியலின மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி சுவர் தீண்டா மைச் சுவர் தான் என உறுதி செய்யப் பட்டு அதனை அகற்றிட வேண்டும் என மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் 02.06.2023 இல் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 27.11 2023 அன்று வட்டாட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர்,காவல் துறையி னர் ஆகியோர் இடத்தை நேரில் தணிக்கை செய்து தீண்டாமைச்சுவர் கட்டப்பட்டுள்ள  இடம் ஊராட்சிக்கு சொந்தமானது தான்.

எனவே தீண்டா மைச் சுவரை அப்புறப்படுத்தி பாதை ஏற்படுத்தித்தர செயல் அலுவலர்  மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட்டனர்.இவ்வளவுக்கு பிறகும் அந்த சுவர் அகற்றப்படாமல் இருக்கி றது. அன்றாட பணிகளுக்கு தடையாக இருப்பதோடு,குறிப்பிட்ட பட்டியலின மக்களைச் சாதி ரீதியாக இழிவுபடுத்தி வருகிற இந்த தீண்டாமைச் சுவரை தமிழக அரசு உடனடியாக அகற்றிட வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.