அம்பத்தூர், ஏப். 30- ஆவடி காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 130 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி காவல் ஆணை யரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை ஒழிக்க வும், ரவுடிகளின் நட வடிக்கைகளை கட்டுப் படுத்தவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 ரவுடி களை காவல் துறையி னர் கைது செய்தனர். இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய வர்களும் அடங்குவர்.