tamilnadu

img

மாணவர்களுக்கு ஆதார், அஞ்சலக கணக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜூன் 10 - பள்ளி மாணவர்களுக்கு ஆதார், அஞ்சலக கணக்கு  தொடங்கும் திட்டத்தை  அமைச்சர் மா.சுப்பிர மணியன் திங்களன்று (ஜூன் 10) தொடங்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஜூன் 10 அன்று திறக்கப்பட்டது.

பள்ளி தொடங்கும் நாளிலேயே அரசு வழங்கும் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் திட்டம், ஆதார் பதிவு செய்து, அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கி தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, இந்த திட்டங்களை சைதாப் பேட்டை, மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கி னார். ஆதார் பதிவு, அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கும் சேவைகளை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர்  பேசியதன் சுருக்கம் வருமாறு: சென்னையில் 52 ஆதார் கருவிகளைக் கொண்டு 22 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஆதார்  பதியும் பணிகள் நடை பெறுகிறது. மாநில, ஒன்றிய  அரசு வழங்கும் ஊக்கத் தொகைகள், உதவித் தொகை, நலத்திட்டங்கள் போன்றவை வங்கிக் கணக்கில் செலுத்தவும், மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியமாக உள்ளது. எனவே, ஆதார் எண் துவங் கும் பணிகளும், வங்கி  கணக்கு எண் துவக்கும்  பணிகளும் தொடங்கப் பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் 48 ஆயிரம் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கப் பட்டுள்ளது. இந்தக் கல்வி ஆண்டில் 60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்து தரப்படும். தமிழ்நாடு முழுவதும் 770 ஆதார் இயந்திரங்கள் கொண்டு இந்த பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் 12ஆம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வளாகங்களில் ஆதார்  புதுப்பிப்பது தொடர்பாக  ஒப்பந்தம் போடப்பட்டிருக் கிறது.

அதன்படி, 45 ஆயிரத்து 917 அரசு மற்றும் அரசு  உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 66 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளனர். நோட்டு புத்தகங் கள் மற்றும் பாடப்புத்தகங் களை 66 லட்சத்து 75  ஆயிரத்து 315 மாணாக்கர் களுக்கும், அட்லஸ் கருவியை 8 லட்சத்து 22  ஆயிரத்து 603 மாணாக்கர் கள் என 70 லட்சத்து 67  ஆயிரத்து 94 மாணக்கர் களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.