tamilnadu

img

தோல்வி பயத்தில் புலம்புகிறது பாஜக! போரூர் கூட்டத்தில் அ.சவுந்தரராசன் தாக்கு

சென்னை, ஏப். 6- தோல்வி உறுதியாகி விட்டதால்  பாஜகவினர்  புலம்பத் தொடங்கிவிட்ட னர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தர ராசன் கூறினார்.

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வுக்கு வாக்கு கேட்டு வெள்ளியன்று (ஏப்.5) போரூரில் மார்க்சிஸ்ட் கட்சி  சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் கட்சியின் தென்சென்னை மாவட்ட விசேச கிளை  பதிப்பித்துள்ள ‘வெறுப்பு அரசியலுக்கு  முடிவு கட்டுவோம்’ எனும் பிரசுரத்தை அ.சவுந்தரராசன் வெளியிட அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி கூட தர முடியாத  நிலையில் மக்கள் உள்ளனர். இதை  சரிசெய்ய மாநில அரசு காலை  உணவு திட்டத்தை செயல்படுத்து கிறது. ஆனால், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க மறுக்கிறது. மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களை தடுத்து,  மக்களுக்கு கிடைக்க வேண்டிய வற்றை பாஜக அரசு தடுக்கிறது.

இந்தியாவின் மொத்த உற்பத்தி யில் 50 விழுக்காடு துணிவகைகள்  தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படு கிறது. ஒன்றிய அரசின் கொள்கை மாநிலத்தின் வளர்ச்சியை, துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 60 லிட்டர் பால்   வியா பாரம் நடைபெற்ற டீக்கடையில் தற்போது 20 லிட்டர் கூட ஓடவில்லை. அந்தளவிற்கு தொழில்  நசிவு ஏற்பட்டுள்ளது. கைத்தறி போன்றே காஞ்சிபுரம் பட்டு நெசவும் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி களை உடைத்து காயலாங்கடையில் போடுகிற நிலை உருவாகி உள்ளது.

வெறுப்பு
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே சமநிலை ஏற்பட்டுள்ளது. மதம்,  இனம் வாரியாக இந்த சமநிலை  நிலவுகிறது என்று உச்சநீதிமன்றத்தில் பாஜக அரசு அறிக்கை தாக்கல்  செய்துகிறது. ஆனால், இஸ்லாமி யர்கள் அதிகம் பிள்ளை பெறுகிறார் கள். இந்துகள் குறைந்து வருகிறார்கள்  என்று வெறுப்பு பிரச்சாரம் செய்கின் றனர். தேர்தல் பத்திர வழக்கில் தீர்ப்ப ளித்த தலைமை நீதிபதி சந்திரசூட் மீது அவதூறு பரப்ப தொடங்கியுள்ளனர்.தோல்வி உறுதியாகிவிட்டதால், ஏதேதோ பேசுகிறார்கள். 

10 லட்சம் சாலையோர மெக்கானிக் குள் வாழ்க்கையை அழிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். 300க்கும் குறைவான தொழிலாளர்கள் பணியாற்றும் கம்பெனிகளை மூட அரசு அனுமதி தேவையில்லை என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர். இதையெல்லாம் அதிமுக ஆதரித்தது. கள்ளக் கூட்டணி வைத்துள்ள பாஜக, அதிமுகவை வீழ்த்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்திற்கு சிபிஎம் பகுதிச்  செயலாளர் வி.தாமஸ் தலைமை தாங்கினார். காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை ),  சி.சங்கர் (காஞ்சிபுரம்), தொகுதி பொறுப்பாளர் க.பீம்ராவ், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், 11வது மண்டலக்குழு தலைவர் வே.ராஜன், அயப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அ.ம.துரைவீரமணி, தளபதி பாஸ்கர் (காங்கிரஸ்), ஞானமுதல்வன் (விசிக), அ.பாஸ்கர் (மதிமுக), வேலுச்சாமி (திக), பாசில் முகமது (மநீம), பன்னீர்செல்வம் (ஏஏபி), அஸ்கப் (மமக), சிபிஎம் பகுதிச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன் (ஆலந்தூர்), த.கிருஷ்ணா (தாம்பரம்),  எம்.சி.பிரபாகரன் (பல்லாவரம்), மதுரவாயல் பகுதிக்குழு உறுப்பினர் கள் க.தண்டபாணி, பி.ஜி.கே.ரமேஷ், எஸ்.பிச்சையம்மாள்  உள்ளிட்டோர் பேசினர்.