சென்னை, மார்ச் 6- தேர்தல் அறிவிக்கை வெளியிடு வதற்கு முன்பாக போக்குவரத்து ஊழி யர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கோரியுள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, தொடர்ந்து புதனன்று (மார்ச் 6) தொழிலாளர் நல தனி ஆணையர் ரமேஷ் தலைமை யில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றது.
இதில் மாநகர போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், சிஐடியு தலை வர்கள் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுக நயினார் உள்ளிட்டு 27 சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது: பணியில் இருக்கும் தொழிலாளர் களுக்கு இந்த மாதமும், ஒருமாத அக விலைப்படியை வழங்கப்படும்; 2018க்கு பிறகு பணி ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கும் அகவிலைப்படி நிலுவை வழங்காமல் இருந்தால் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாரிசு அடிப்படையில் நடத்து நர்களாக செல்லும் பெண்களுக்கு உயரத்தை காரணம் காட்டி பணி மறுக்க ப்படுவதை சுட்டிக்காட்டினோம். உயர அளவை தளர்த்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2022 நவம்பரில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக்கால பணப் பலன்களை வழங்கவில்லை. அது குறித்து கேள்வி எழுப்பியபோது, 2022 நவம்பர் 2023 ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள் ளோம்; அது முடிவுறும் தருவாயில் உள்ளது என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.
வரவுக்குச் செலவுக்குமான இடை வெளியை அரசு ஈடுகட்ட வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தர வேண்டும், காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்ற கோரிக் கைகள் முன்னேற்றத்தில் இருப்ப தாகவும் அதிகாரிகள் கூறினார்கள். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் கான தேதி மற்றும் பிற கோரிக்கை கள் குறித்து அரசிடம் கேட்டு தெரி விப்பதாக கூறினர்.
மேலும், மே அல்லது ஜூன் மாதத்தில் பேச்சுவார்த்தை தொட ங்கலாம் என்று கூறியதை நிராக ரித்து விட்டோம். அனைத்து தொழிற் சங்கங்களும் ஒருமித்து இடைக்கால நிவாரணம் கோரியுள்ளோம். ஓய்வு பெற்றவர்கள் மருத்துவக் காப்பீட்டிற்கு 497 ரூபாய் செலுத்தி வந்ததை, 1100 ரூபாயாக உயர்த்தி உள்ளனர். இதனை சுட்டிக் காட்டி னோம். அது குறித்தும் பேசுவதாக தெரி வித்துள்ளனர். அடுத்த தேதி குறிப்பிடப் படாமல் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்க ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.