அனவரதநல்லூரில் வாலிபர் வெட்டிக் கொலை
தூத்துக்குடி, டிச.23- அனவரதநல்லூர் கிராமத்தில் ரேஷன் கடை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது
தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், அனவரதநல்லூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் சுடலைமாடன் மகராஜன் (35) இவர். அங்குள்ள ரேசன் கடையின் பின்புறம், தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முத்துக்குமார் (19) என்பவரை கைது செய்துள்ளனர். இருவரும் ஞாயிறன்று இரவு மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் பார்வையிட்டு விசா ரணை நடத்தினார்.
ஏழை விவசாயிகளிடம் வசூல் செய்த விஏஓ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
தூத்துக்குடி,டிச.23 தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சாகுபடி அடங்கலுக்கு ஏழை விவசாயிகளிடம் அடாவடி வசூல் செய்த கிராம நிர்வாக அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட செக்காரக்குடி -II கிராம நிர்வாக அலுவலராக செல்வக்கனி என்பவர் பணிபுரிந்து வந்தார்.
தற்போது பெய்த கனமழையில் புஞ்சை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர் சாகுபடியானது முற்றிலும் அழிந்த தால் பயிர் காப்பீடு மற்றும் இழப்பீடு பெறும் வகைக்கு பயிர் அடங்கல் பெறுவதற்கு விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரை போய் சந்தித்தபோது அடங்கலுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.
இது தொடர்பாக செக்காரக்குடி கிராம மக்கள் தூத்து க்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபுவிடம் புகார் அளித்த னர். மேலும், செல்வக்கனி என்பவர் கிராம மக்களிடம் அடங்கல் வழங்க பணம் கேட்டது தொடர்பாக வீடியோ வும் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக திருவை குண்ட வட்டாட்சியர் ரத்னா சங்கர் விசாரணை நடத்த கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி செக்கா ரக்குடி கிராம அலுவலர் பணியில் இருந்து உடனடி யாக அவரை விடுவித்து அந்த இடத்தில் சுரேஷ் என்ப வரை கிராம நிர்வாக அலுவலராக நியமித்து வருவாய் கோட்டாட்சியர் பிரபு உத்தரவிட்டார். தற்போது கிராம நிர்வாக அலுவலர் செல்வக்கனி எந்தப் பணியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளார்.
கீழநத்தம் பஞ்சாயத்தில் புதிய சாலை ரூ.7 லட்சத்தில் அமைக்க நடவடிக்கை
நெல்லை, டிச.23- நெல்லை மாவட்டம் கீழ நத்தம் ஊராட்சி சுபம் காலனி பகுதியில் ஏற்கனவே சிமெ ண்ட் சாலை உள்ளது.
சமீ பத்தில் பெய்த மழையினால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி கிடப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த காலனி பகுதியானது தாழ் வான பகுதியாக இருப்பதா லும், சாலையின் இருபுறமும் உள்ள கழிவு நீர் தொட்டிகளில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பதாலும் அங்குள்ள ஆர்.சி.தேவாலயத்துக்கு முன்புறம் மழை நீர்தேங்கு கிறது. இப்பகுதியை மேடாக்கி பேவர் பிளாக் சாலை அமைப்ப தற்கு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிகள் தொடங்கப்பட்டன.
பணிகள் தொடங்கி இரு புறமும் சிமெண்ட் கான்கிரீட் அமைக்கும் பணியை தொட ங்கிய போதே மழை வந்து விட்டது. இதனால் அந்த பகுதியில் 3 முறை மழைநீர் மோட்டார் மூலம் வேறு பகுதி களுக்கு யேற்றப்பட்டது. அப் பகுதியில் உள்ள மழைநீர் வெளியேறியவுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கி விரைவில் முடிக்கப்படும் என்று பஞ்சாயத்து நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தென்காசி, டிச.23- திருநெல்வேலி நீதிமன்ற வாயில் முன்பு ஏற்பட்ட கொலை சம்பவத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை தலைவர் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாது காப்பு போட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தென் காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் ,சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ,செங்கோட்டை, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்க ளுக்கு காவல் ஆய்வாளர் தலை மையில் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்பில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்,
காணி பழங்குடியினரின் கோரிக்கைக்கு தீர்வு
திருநெல்வேலி, டிச.23- தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பழங்குடியின கிராமத்திற்கு செல்ல இரும்பு பாலம் அமைக்க மாநில வனத்துறை அனுமதி மற்றும் வன விலங்கு பாதுகாப்பு வாரிய அனு மதி பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானப் பணிக ளுக்காக ஏற்கனவே சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் ஒப்பந்தபுள்ளி கோரும் பணிகள் விரைவில் தொடங்கும் என கருதப்படுகிறது.
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நெல்லை ஸ்ரீபுரத்தில் நாளை துவக்கம்
திருநெல்வேலி, டிச.23- நெல்லை ஸ்ரீபுரத்தில் தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 25ம் தேதி துவங்குகிறது. தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 25,26,27,28 மற்றும் 29ம் தேதிகளில் தின மும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரத்தில் நடக்கிறது. தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் பயிற்சியில் பங்கேற்கலாம். வயது வரம்பு, கல்வித் தகுதி தேவை யில்லை. பயிற்சியில் சேர விரும்பு பவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட் டோக்கள், பயிற்சி கட்டணம் .7,700, ஆதார் அட்டையுடன் நெல்லை ஸ்ரீபுரம் பீமா ஜூவல்லரி அருகில் உள்ள ரோகிணி கோல்டு அகாடமி க்கு சென்று பயிற்சியில் சேரலாம். மேலும் விவரங்கள் அறிய விரும்புபவர்கள் நெல்லை டவுனில் உள்ள ரோகிணி கோல்டு அகாடமி க்கு நேரில் சென்று தெரிந்து கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் கார் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
தூத்துக்குடி, டிச.23- தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமம், நாடார் தெருவை சேர்ந்த வர்கள் சித்திரைவேல் (60) திரவி யராஜ் (55) இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் ஞாயிறன்று எட்டயபுரம் சென்று விட்டு மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குறுக்குச்சாலை அருகே வந்த போது பெட்ரோல் போடுவதற்காக இருசக்கர வாகனத்தை திருப்பி உள் ளனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாகமோதியது. இவ்விபத்தில், பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் ராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அலாவுதீன் மகன் சையது முகமது (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.