tamilnadu

img

புயல் நேரத்தில் மின் தடை ஏற்படாது

சென்னை,டிச.2- புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மின்தடை ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புயல் நேரத்தில் மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் எந்தவொரு இடத்திலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். குடிநீர் விநியோகம், தகவல் தொடர்பு, மின் விநியோகம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.