அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று (மார்ச் 8) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நுழைவு வாயிலில் சர்வதேச மகளிர் தினம் கண்காட்சியை கவிஞர் சல்மா தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எழுத்தாளர் கீதா இளங்கோவன், மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி, முனைவர் கல்பனா கருணாகரன், சமூகசெயற்பாட்டாளர் நேகா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் த.பார்வேந்தன், ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையத்தின் நிர்வாகி சி.விஜயகுமார், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சிவக்குமார், துணைத்தலைவர் ஜி.சம்கிராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், பெண் வழக்கறிஞர்கள் உபக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.சமந்தா, பி.ஹேமாவதி உள்ளிட்டோர் பேசினர்.