tamilnadu

img

காலத்தே தெறித்திருக்கும் முத்து

‘எங்க ஊர்ல நாடகம் நடத்துறோம்...நீங்க வந்து நடிக்கணும்’ 

‘அதுல ராஜ பார்ட் யாரு?’
.......(ஏதோ ஒரு பெயரைச் சொல்கின்றனர் வந்தவர்கள்)‘ஏன் விஸ்வநாத தாஸ் அவங்களை  ராஜ பார்ட்டா போடல...?’

‘இல்லீங்கம்மா...அவரை ராஜ பார்ட்டா போட்டா, அவரு கூட சேர்ந்து நடிக்க நடிகைங்க யாரும் வரத் தயங்குறாங்க...’

‘ஏனாம்?’
‘ஏன்னா....அவரு....(அருகில் வந்து காதில் சொல்கிறார்கள்) அந்த சாதி...ஒரு  ‘சின்ன சாதி’ ஆளோட நடிக்க மாட்டேன்னு  சொல்லிட்டாங்க’

‘இதென்ன அநியாயம்...நான் வந்து நடிக்கிறேன்...நீங்க உங்க ஊர் நாட கத்துல அவரையே ராஜ பார்ட்டா போட ணும்...’

இப்படித் தான் தொடங்குகிறது, இந்தப் புத்தாண்டில் சென்னை கலைக்குழு, சென்னை சூளைப்பள்ளம் பகுதியில் நிகழ்த்திய வீதி நாடகம்.  யாரந்த நாடக நடிகை?  யாரைப் பற்றிய கதை இது ? பின்னாளில் விடு தலைப் போராட்ட வீராங்கனையாக -  விவ சாயிகள் உரிமைக்குக் குரல் கொடுத்துக் களம் கண்டவராக - மகத்தான பெண்ணுரிமைப் போராளியாக மலர்ந்த சாட்சாத் கே.பி. ஜானகியம்மாள் தான்! புத்தாண்டு எப்போதும், தில்லி காசியா பாத் தொழில் நகரத்தின் அதிர்ச்சி நிகழ்வை நினைவு கூராமல் விடியாது.

 நிர்வா கங்களின் அராஜகப் போக்குகளை எதிர்த்து சிஐடியு சங்கம் 7 நாட்கள் வேலை நிறுத்த அறைகூவல் விடுத்தி ருக்க, 1989 ஜனவரி முதல் நாளன்று ‘ஹல்லா போல்’ (உரக்கப் பேசு) என்ற நாடகத்தை அங்கே தொழிலாளர்கள் மத்தியில் நிகழ்த்த வருகையில்,  நிர்வாகங்களின் கூலிப் படையால் தாக்குண்டு வீதி நாடகக் களமே தனக்குக் கொலைக் களமாக ஆகச் சரிந்த மகத்தான மக்கள் கலைஞர் சஃப்தர் ஹஷ்மி மறுநாள் மரித்துப் போனார். ஆனாலும் இதற்கெல்லாம் அஞ்சி டாது அடுத்த மூன்றாம் நாள் அதே இடத்தில் அதே நாடகத்தை அவருடைய காதல் இணையர் மாலா ஸ்ரீ துணிச்ச லாகப் போய் நின்று நிகழ்த்தியது வரலாறு. அது மட்டுமல்ல, அந்த சமயத்தில் புது தில்லியில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா மேடையில் திரைக்கலைஞர் - சமூக செயற்பாட்டாளர் ஷபனா ஹஸ்மி கருத்துரி மைக்கு எதிரான இந்தப் படுகொலைக்கு எதிரான கண்டன அறிக்கையைத் துணி வாக நின்று வாசித்தார்.

ஆண்டு தோறும் சஃப்தர் ஹஷ்மி நினைவு நாளை வீதி நாடக நிகழ்வுகள் மூலம் நினைவு கூர்ந்துவரும் சென்னை கலைக்குழுவினர், இந்தப் புத்தாண்டு நாளன்று இரண்டு நாடகங்களை நடத்தி னர். முதலாவது, தலித் பகுதியில் இறந்த வர் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் பாதையை சாதி ஆதிக்க சக்தி யினர் மறிக்கும் கொடுமைக்கு எதிரான ‘நல்வழி’ எனும் நாடகம். இரண்டாவது நாடகம் அசாத்திய போராளி கே.பி.ஜானகியம்மா வாழ்க்கைச் சித்திரம்.

ஆடல், பாடல், நடிப்புத் திறன் மிக்க கலைஞரான கே.பி.ஜே, பின்னர் காங்கிரஸ் கட்சி மேடை ஒன்றில் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு அமைய, அரசியல் களத்திலும் அவரது ஈடுபாடு துலங்க ஆரம்பித்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் செயல்பட்ட போது தோழர்கள் ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரின் வழிகாட்டலில் மேலும் தீவிரமானது. அவரது சமூக விழிப்புணர்வு, அநீதிக்கு எதிரான ஆவேச உளப்பாங்கு காரணமாகப் படிப்படியாக கம்யூனிஸ்ட் ஊழியர் ஆவதும், மக்கள் பிரதிநிதியாக தேர்தல் களத்திலும் வாகை சூடுவதும், இடையே பன்முறை மக்களுக்கான போ ராட்டங்களுக்காகச் சிறை வாழ்க்கையும் என அசராது விரியும் அவரது உன்னத தியாக வாழ்க்கையை வெறும் 23 நிமிட நேரத்திற்குள் மிகச் செறிவாகவும், காண் போர் நெஞ்சுருகி உறைந்து போக வைக்கக் கூடியதாகவும் அமைந்தது நாடகம்.  

கே.பி.ஜானகியம்மா வாழ்க்கை குறித்த பதிவுகளை நாடக வடிவில் நிகழ்த்த அமர்ந்து தொகுக்கத் தொகுக்க அது விரி வடைந்து கொண்டே போனது, ஆனா லும், ஒரு முன்னோட்டமாக இந்தக் குறுகிய நேர நாடகம் இப்போது, விரைவில் விரிவான வடிவில் தயாரிக்க உள்ளோம் என்று அறி முக உரையில் தெரிவித்தார் நெறி யாள்கை செய்த நாடக இயக்குநர் பிரளயன்.

இளவயது கே.பி.ஜே., பாத்திரத்தில் நாட்டியக் கலைஞரும், பாடகியுமான அமலா மோகன் அவர்களது ஆவேச நடிப்பும், முக பாவங்களும், உடல் மொழி யும், குரல் வளமும், இசைப்பாடலும் அபா ரமாக அமைந்தது.

அரசியல் களத்தில் கே.பி.ஜே., பாத்திரத்தை எழுத்தாளர், பாடகி கவின் மலர் சிறப்பாக வழங்கிய தோடு இரண்டு   இசைப்பாடல்களையும் நிகழ்வில் அருமையாக இசைத்தார். கே.பி.ஜே., வாழ்க்கையின் சில பகுதிகளை எடுத்துரைக்கும் கதை சொல்லியாகவும், பாப்பா உமாநாத் வந்து போகும் இடங்களில் அந்தப் பாத்தி ரமாகவும், விவசாய மக்கள் தங்கள் உடை மைகள் பறிக்கப்பட்டு நொறுங்கிக் கதறு மிடத்தில் பண்ணை உழைப்பாளியாகவும் சிறப்பான பங்களிப்பு வழங்கினார் நாடகக் கலைஞர் - ஆய்வாளர் அ.மங்கை. குருசாமி பாத்திரத்தில் அருமையாகச் செய்த ஆலம் ஷா, சென்னை கலைக்குழு வின் மூத்த நடிகர்கள் அசோக் சிங் உள்ளிட்டு அனைத்துக் கலைஞர்களும் இரண்டு நாடகங்களையும் உயி ரோட்டமாகப் படைத்தனர்.

கே.பி.ஜே., அவர்களைக் குறித்த முழு நீள நாடகம் எப்போது என்ற வேட்கையைத் தூண்டிவிட்டது இந்த குறுநாடகம்.   இன்றைய தலைமுறைக்கும், இனி வரும் தலைமுறைகளுக்கும் இயக்கத் தலைவர்கள் வரலாறுகளை நாடக வடிவில் கொண்டு செல்வது மிக மிகத் தேவையானது என்ற எண்ணத்தையும் தான்!