சென்னை, ஜன.3 - சென்னையில் உள்ள போக்கு வரத்துகளில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமானது. நாள்தோறும் பல்லா யிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் திட்டங்களும் தீட்டப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரயில் கள் செல்லும் வகையில் சென்னை திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் 3-வது மாடி நிலையத்தில் ரயில்கள் நிறுத்தும் வகையில் கட்டிடத்திற்கான வடிவமைப்பு வெளி யாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி ஒரு வர் கூறியதாவது:- கட்டிடங்கள், மக்கள், செயல்பாடு கள் மற்றும் பொது போக்குவரத்தை ஒன்றாக கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்கள் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
3 இடங்களில் நிலை யங்களை கட்டுவதற்கான செலவு 2-ம் கட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசிடம் நிதி கோருவோம். இந்த திட்டத்திற்கு திருமங்கலத் தில், மேம்பாலம் அருகே 3 வீடுகள் இருந்த 450 மீட்டர் நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
திருமங் கலத்தில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ ரயில் நிலையத்துடன் ஒருங்கிணைந்த நடைபாதையை உருவாக்க விருப்பம் உள்ளது. ஆனால் போக்குவரத்திற்கு இடை யூறாக இருக்கும் மேம்பாலத்தை அகற்ற வேண்டியது இருக்கும். மேலும், கோயம்பேடுவில் மெட்ரோ நிலையத் தில் 2-ம் கட்டமாக விரிவாக்கம் செய்ய வும், ஆவடிக்கு 3-வது வழித்தடத் திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு 3 வழித்தடங்களை இணைக்கும் பொது வான பாதை அமைக்கப்படும். திருமயிலையில் குறைந்தபட்சம் 5 இடங்களில் உள்நுழைவுப் பகுதி அல்லது வெளியேறும் இடங்களில் ஒன்று புதிய பல மாடி கட்டிடத்தில் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். சீனாவில் சோங்கிங் பகுதியில் 19 மாடி குடியிருப்பு வளாகத்தில் 6-வது மாடியில் மெட்ரோ நிலையம் உள்ளது. நாக்பூரில் உள்ள ஜீரோ மைல் மெட்ரோ நிலையத்திற்கு மேலை 15 அடுக்கு நட்சத்திர ஓட்டல் கட்ட திட்டமிடப்பட் டுள்ளது. இது 3 மாடி வாகன நிறுத்தும் இடத்திற்கு மேலே கட்டப்பட்டுள்ளது. ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடத் தின் ஒரு தளத்தில் மட்டும், ரயில் பாதை அமைக்கப்பட்டு, அந்த கட்டடத்துக்குள் ரயில் நுழைந்து செல்லும். இந்தக் காட்சியை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சென்னை திருமங்கலத்திலும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.