tamilnadu

வெந்நீரில் தவறி விழுந்த சிறுமி பலி

பெரியபாளையம்,பிப்.17- பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி குப்பம்மாள். இவர்களது 4 வயது மகள் நித்தியஸ்ரீ. குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்கச் செய்வது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி விட்டு சமையலறைக்கு கியாசை ஆப் செய்ய சென்றார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வெந்நீர் அண்டாவில் விழுந்ததில் அலறி துடித்தாள். சத்தம் கேட்டு வந்த குப்பம்மாள் சிறுமியை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நித்தியஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;