tamilnadu

ஆளுநரின் செயல்களைக் கண்டு அமைதியாக இருக்க முடியாது!

சென்னை, பிப். 15 - ஆளுநரின் சட்டத்தை மீறிய செயல்களைக் கண்டு அமைதியாக இருக்க முடி யாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில்  ஆளுநர் உரைமீது நடை பெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து வியாழக்கிழமை (பிப்.15) முதல்வர் ஸ்டா லின் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:

“ஆண்டின் தொடக்கத் தில் ஆளுநர் உரையாற்று வது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கை யாக அமைச்சரவை தயா ரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கட மை. ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இம்மா மன்றத்தையும் பயன்படு த்திக் கொண்டாரோ! என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்” 

சட்டமன்றத்தை அவமதிக்கும் ஆளுநர்

ஆளுநரின் செயல் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்ட மன்றத்தையே அவமானப் படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ் நாட்டு மக்களை அலட்சியப் படுத்தும் காரியமல்லவா? மக்களாட்சி மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக்கொண்ட பத விப் பிரமாணத்திற்கு மாறாக செயல்படுவது அல்லவா?

எங்களைப் பொறுத்த வரை, இதுபோன்ற எத்த னையோ தடைகளை உடை த்து எழுந்து வந்தவர்கள். “தடைக்கற்கள் உண்டென் றால், அதை உடைக்கும் தடந் தோள்கள் உண்டு”  பாசிசம் - எதேச்சதிகாரத்தை நெஞ்சு யர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டு செயல்களைப் பார்த்து பயந்துவிட மாட்டோம். போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல் வேன்! எவர் வரினும் நில் லேன் அஞ்சேன்! என்பது தான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்!

ஆதிக்க குவியலை அகற்றுவோம்
திமுக ஆட்சியில் தமிழ் நாடு அனைத்து வகையிலும் வளர்ந்து வருவதைப் பார்த்து எதிரிகளுக்கு பொறாமையும் கோபமும் வருகிறது அல்லவா? இது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. ஆதிக்கக் குவியலை அகற்று வதும், அடிமைப் பள்ளத்தை நிரப்புவதும் இவர்களது கோபத்துக்குக் காரணம். அந்தக் கோபத்தை ஒவ் வொருவரும் ஒவ்வொரு வகையில் காட்டுகிறார்கள். அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் ஆளுநரும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக நாம் அமைதி யாக இருக்க முடியாது. நாட் காட்டியில் நகரும் ஒவ் வொரு நாளும், நாட்டு மக்க ளுக்கு நன்மை செய்யும் நாளாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக் கிறோம்.