சென்னை மார்ச் 16- விஷ்வ குரு என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மோடி, தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதேன்? என்று முதல் வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி யுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கடந்த காலத்தில் திமுக செய்த பாவத்தால் தான் இலங்கை அர சால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி (கன்னியாகுமரியில்) கூசாமல் புளுகி இருக்கிறார்.
இந்த அளவிற்கு பிரதமர் அப்பாவியா?
திமுக அரசின் கடும் எதிர்ப்பை யும் மீறித் தான் கச்சத்தீவு இலங் கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்ற உண்மை வரலாற்றைத் தமிழ் நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நாட்டின் ஒரு பகுதியை மாநில அர சால் மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும் என நம்பும் அளவுக்குத் தான் பிரதமர் அப்பாவியாக இருக் கிறாரா?
கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படு வதையும் சித்திரவதைக்கு ஆளா வதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல் லயா?
அதானிக்காக திறந்த வாய் மீனவர்களுக்கு திறக்காதது ஏன்?
அதானி நிறுவனத்தின் வர்த் தக நலன்களுக்காக இலங்கை அர சுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பாஜக அரசு இந்திய மீனவர்களின் பாரம் பரிய உரிமைக்காக வாய்திறக்கா தது ஏன்?
படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வ மாக, வெளிப்படையாகக் கண்டிக் காதது ஏன்? இரண்டாவது முறை யாகக் கைது செய்யப்படும் மீன வர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பாஜக ஆட்சிக்காலத்தில் ஏற்பட் டதுதான். இதைத் தடுக்க என்ன நட வடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல் லாம் பதில் இல்லை;
கபட நாடகத்தை மீனவர்கள் தோலுரிப்பார்கள் தமிழ்நாடு தொடர்ந்து புறக்க ணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன? என்று பதில் சொல்லுங்க பிரதமரே என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக் கும் பதில் இல்லை!
ஆனால், வழக்கமான புளுகு களும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஷ்வ குரு என மார்தட்டிக் கொள்ளும் பிர தமர் மவுன குருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக் கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங் கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்.
ஆனால், வழக்கமான புளுகு களும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஷ்வ குரு என மார்தட்டிக் கொள்ளும் பிர தமர் மவுன குருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக் கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங் கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்.