சென்னை, ஜூலை 31- நாய் தொல்லையை கட்டுப்படுத்த மண்டலத் திற்கு ஒரு இன கட்டுப் பாட்டு மையம் அமைக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 123வது வார்டு உறுப்பி னர் எம்.சரஸ்வதி வலியுறுத் தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் செவ்வாயன்று (ஜூலை 30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிபிஎம் உறுப்பினர் எம்.சரஸ்வதி பேசிய தன் சுருக்கம் வருமாறு:
சென்னை நகரம் முழுவதும் தெரு நாய்கள் அதிகளவு உள்ளது. தெருக்களில் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. எனவே, நாய் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நாய் இன கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
பாரதிதாசன் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குடிசைகளில் மக்கள் வாழ்கின்றனர். அதில் ஒரு பகுதி யினருக்கு மாற்று இடம் தரப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு, அதே இடத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.
வேகத்தடை
123வது வட்டத்தில் குறிப்பாக 4 சாலை களில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனை தடுக்க கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும். எல்டாம்ஸ் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் சாலைகளில் வேகத்தடை அமைக்க இரண்டரை வருடமாக கோரி வருகிறேன். ஆனால், காவல்துறை அனுமதி தராமல் உள்ளது.அதனை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் பணியாளர்களை நியமித்திடுக
மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து கொண்டு, மின் தடை ஏற்படுவதால், சாலையில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் மண்டல தலைவர்களை கூட மதிக்காமல் செயல்படு கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு களப்பணியாளர் மட்டுமே உள்ளார். எனவே, கூடுதலாக 3 பேரை நியமிக்க வேண்டும். மழைக்காலத்தில் வெள்ளத்தை வெளியேற்றும் பணியை மேற்கொள்ள தற்காலிகமாக ஊழியர்களை நியமிக்கப் படுகிறார்கள். வார்டுக்கு 5 பேரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.
2020-21 கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர் கள் ஒருநாள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போதிருந்து அதிமுக அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த நடவடக் கைகளை ரத்து செய்தது. ஆனால் மண்டலம் 9ல் பணியாற்றும் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தை ஊழியர் கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படா மல் உள்ளது. எனவே, அந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.