tamilnadu

முதல்வர் நிவாரண நிதிக்கு விசிக ரூ.10 லட்சம் வழங்கியது

சென்னை, டிச.9 - புயல் மழை மீட்பு மற்றும் நிவா ரணப் பணிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரூ.10 லட்சம் வழங்கினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு  மாத ஊதியத்தையும் வழங்கியுள்ள னர். வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 கோடி கேட்ட  நிலையில் குறைந்த தொகையை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கி யுள்ளது.

கடந்த காலங்களை விட இந்த  முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை  சிறப்பாக இருந்தது. புயல் பாதித்த  பிறகு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடனே களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு  தன் சக்திக்கு ஏற்ப மீட்புப் பணிகளை  மேற்கொண்டுள்ளது; அதை தீவிரப்படுத்த வேண்டும்.

அனைத்து சட்டமன்ற உறுப்பி னர்களும் களத்துக்கு சென்று மக்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். திமுக மட்டுமின்றி அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் களத்தில் நின்று அவர்களால் இயன்ற உதவி களைச் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.