மாடியிலிருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முயன்று தன்னுயிரை இழந்த சிறுவன்!
சென்னை, ஜூன் 27- சென்னை திருவொற்றி யூரில் பா.விக்னேஷ்வர் என்ற 17 வயது சிறுவன் ஏசி பொருத்தும் பணியின் போது மாடியிலிருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முயன்று தன் உயிரை இழந்தார். திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள எழுத்துக்காரன் தெருவில் பி.பாபு-ரேகா தம்பதியின் மகனான விக்கி (எ) விக்னேஷ்(17) மூலக்கடையில் உள்ள சாய்ராம் ஐடிஐயில் ஏசி மெக்கானிக் படித்து வரு கிறார். நேரம் கிடைக்கும் போது ஏசி பழுதுபார்க்கும் பணியை நண்பர்கள் பூவண்ணன் பிர வீனுடன் இணைந்து செய்து வந்தார். இந்நிலையில் புதனன்று (ஜூன் 25) பெரியார் நகரில் உள்ள வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் புதிய ஏசி பொருத்தும் பணியை செய்து கொண்டிருந்தார். பள்ளி யின் முதல் தளத்தில் உயிர்காப்பு உபகர ணங்கள் ஏதுமின்றி வேலை செய்து கொண்டிருந்த நண்பன் பீரவீன் தவறி விழுந்தபோது அவரை பாதுகாக்க முயன்றுள்ளார். நண்பனை காப்பாற்றியதில் பிடி தளர்ந்து தரையில் தலை கீழாக விழுந்ததில் பலத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சிறு வன் விக்கி உயிரிழந்தார். இதில் பிரவீன் உயிர் தப்பினார். உயிர்காக்கும் உப கரணம் வழங்காமல் சிறு வனை பணிக்கு அமர்த்திய வெள்ளையன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடு ம்பத்திற்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் கால டிப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவ மனையில் உடற்கூராய்பு செய்யப்பட்டு வியாழனன்று (ஜூன் 27) பட்டினத்தார் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.