சென்னை, ஆக. 21 - பேருந்து நிறுத்தங்களில் கிடந்த சுமார் 96 மெட்ரிக் டன் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை புதனன்று (ஆக.21) மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் 419 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து தட சாலைகளில் ஜூலை 22 முதல் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த குப்பைகள், கட்டிடக் கழிவு கள் அகற்றுதல், கேட்பாரற்று கைவிடப் பட்ட வாகனங்களை அகற்றுதல், பொது மக்களுக்கு இடையூறாக இருந்த தொங்கும் கேபிள் ஒயர்கள் அப்புறப்படுத்துதல், எரியாத மின் விளக்குகளை ஒளிர வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள் ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 36 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகளிலும் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஆயிரத்து 265 பேருந்து நிறுத்தங்களில் தீவிரத் தூய்மைப் பணி புதனன்று (ஆக.21) தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் 2 ஆயிரத்து 541 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நீண்ட நாட்களாக தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டது. இருக்கைகள் தூய்மைப்படுத்துதல், தேவையற்ற செடி, கொடிகள் அகற்றுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற பணிகளும் மேற்கொள் ளப்பட்டது.
இதன்படி, 49 மெட்ரிக் டன் குப்பைகள், 47 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள், 4 ஆயிரத்து 221 சுவரொட்டிகள், அனுமதி யின்றி வைக்கப்பட்ட 47 விளம்பரப் பதா கைகள் அகற்றப்பட்டது. 5 ஆயிரத்து 402 பயணிகளின் இருக்கைகள் சுத்தம் செய்யப் பட்டது. பேருந்து நிறுத்தங்களில் 78 சிறுசிறு பழுதுகள் கண்டறியப்பட்டு, சரி செய்ய அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.