tamilnadu

வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல் 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி

சென்னை, மார்ச் 30 - மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதன்படி, 874 ஆண்கள், 76 பெண்கள் உட்பட 950 பேர் போட்டி யில் உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 அன்று நடை பெறுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் மட்டும் 1,509 ஆண்கள், 240 பெண்கள் உட்பட 1,749 பேர் மனு தாக்கல் செய்தனர். பரிசீலனையின் போது 653 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, மனுக்களை திரும்பப் பெற இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப் பட்டது. இதில் 25 பேர் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, சனிக்கிழ மை (மார்ச் 30) மாலை 3 மணிக்கு இறுதி வேட்பா ளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கரூரில் 56 பேர் போட்டி
இதன்படி, மாநிலத்தில் அதிகப்பட்சமாக கரூர்  மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, பாஜக வேட்பாளர்கள் உட்பட 54 பேர் போட்டியிடு கின்றனர். அடுத்து, நாமக்கல்லில் 40 பேரும், கோவையில் 37 பேரும், தென்சென்னையில் 41 பேரும் களத்தில் உள்ளனர்.

தஞ்சாவூர், காஞ்சிபுரம்..
குறைந்த எண்ணிக்கையாக நாகப்பட்டினம் தனி தொகுதியில் 9  பேரும் காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் 11 பேரும் தஞ்சாவூரில் 12 பேரும் போட்டியிடுகின்றனர்.

திண்டுக்கல்லில் 15 பேர்
திருவள்ளூர் (தனி) 14, வடசென்னை 35, தென் சென்னை 41, மத்திய சென்னை 31, திருபெரும்புதூர் 31, அரக்கோணம் 26, வேலூர் 31, கிருஷ்ணகிரி 27, தருமபுரி 24, திருவண்ணாமலை 31, ஆரணி  29, விழுப்புரம் (தனி) 17, கள்ளக்குறிச்சி 21, சேலம் 25, நாமக்கல் 40, ஈரோடு 31, திருப்பூர் 13, நீல கிரி (தனி) 16, கோவை 37, பொள்ளாச்சி 15, திண்டுக்கல் 15.

மதுரை 21, தூத்துக்குடி 28
கரூர் 54, திருச்சிராப்பள்ளி 35, பெரம்பலூர் 23, கடலூர் 19, சிதம்பரம் (தனி) 14, மயிலாடுதுறை 17, நாகப்பட்டினம் (தனி) 9, தஞ்சாவூர் 12, சிவகங்கை 20, மதுரை 21, தேனி 25, விருதுநகர் 27, இராமநாதபுரம் 25, தூத்துக்குடி 28, தென்காசி 15, திருநெல்வேலி 23, கன்னியாகுமரி 22 பேர் போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு
இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் 8 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 12 பெண்கள், 10 ஆண்கள் உட்பட 22 பேர் போட்டியில் உள்ளனர்.