சென்னை, ஏப். 4 - மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தம் உள்ள 68 ஆயிரத்து 144 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 8050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. அதிகபட்சமாக மதுரையில் மட்டும் 511 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன. மேலும் 181 மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.
தேர்தல் பணிகளில் 7 லட்சம்ஊழியர்கள்
தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள 68 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நிழற் பந்தல்கள், நாற்காலிகள், குடிநீர் வசதி அமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் அமைக்கப்படுகிறது.யர்கள்
இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என மொத்தம் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தேவை யான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்கள் தான் அதிகம் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் அனுமதிக்கவில்லை
ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு கணக்கு வேண்டும். இந்த தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வணிக அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளன. இதேபோல் வேறு சிலர் மனு கொடுத்திருந்தனர். அவற்றை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் அதற்கு அங்கிருந்து பதில் வர வில்லை.